செங்கல்பட்டில் திடீர் நிலநடுக்கம்...!! பீதியில் உறைந்த மக்கள்...!!

Tamil nadu Earthquake Chengalpattu
By Karthick Dec 08, 2023 04:30 AM GMT
Report

இன்று செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அவதிப்படும் மக்கள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வந்தனர். கடந்த 4-ந் தேதி புயலின் காரணமாக மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது.

earthquake-in-chengalpattu

மக்களின் இயல்பு நிலையை மீட்டெடுக்க அரசு தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், இன்னும் சில இடங்களில் நிலைமை சீரகவில்லை. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வருத்தத்தை கூறி வருகின்றார்.

நிலநடுக்கம்

இந்நிலையில், தான் செங்கல்பட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவி அதிர்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.2 ரிக்டர் அளவில் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல, திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் மாவட்டங்களிலும் இதே போன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

earthquake-in-chengalpattu

இந்த நிலநடுக்காமாது காலை சுமார் 7 மணி 39 நிமிடங்களுக்கு பதிவானதாக கூறப்படுகிறது. லேசான நிலநடுக்கம் என கூறப்படுகிறது. இதேபோல கர்நாடக மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.