ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற டூட்டி சந்த் இடைநீக்கம்...!
ஊக்கமருந்து பயன்படுத்தி ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற டூட்டி சந்த் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
டூட்டி சந்த்
ஒடிசாவை சேர்ந்த 24 வயதான டூட்டி சந்த், ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீ, 200 மீ பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினார்.
மேலும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாப்போலியில் நடந்த யுனிவர்சியேடில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரியான டூட்டி சந்த், தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்த இந்தியாவின் முதல் தடகள வீராங்கனையுமாவார்.
டூட்டி சந்த் இடைநீக்கம்
ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற டூட்டி சந்த், தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதற்காக தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ப்ரிண்டர் சோதனையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பாசிட்டிவ் என நிரூபிக்கப்பட்டதையடுத்து, டூட்டி சந்த் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
Dutee Chand faces suspension after sprinter tests positive for prohibitive substance
— ANI Digital (@ani_digital) January 18, 2023
Read @ANI Story | https://t.co/zOb6wMmqjt#DuteeChand #Sports pic.twitter.com/YnWbijkCCR