பாஜகவின் அடுத்த டார்கெட் துரைமுருகன் தான்..? திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பதிவு!!
தொடரும் ED, IT சோதனையில் அடுத்து அமைச்சர் துரைமுருகன் தான் டார்கெட் தான் என்ற பதிவு தற்போது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
தொடரும் சோதனைகள்
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததில் துவங்கி தற்போது வரை தமிழக்த்தில் ED மற்றும் IT ரைடுகள் கவனத்தை பெறுவது மட்டுமின்று சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. கைதான செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தற்போதும் சென்னை புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நெக்ஸ்ட் நான் ரெடி ஆயிக்கறேன். pic.twitter.com/AnxCoayjd3
— Savukku Shankar (@SavukkuOfficial) November 3, 2023
அதே போல கடந்த ஜூலை மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது மட்டுமன்றி அவரை விசாரணைக்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது துரைமுருகனா..?
அதன் நீட்சி தான் தற்போது பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனைகள் என திமுகவினர் கூறி வருகின்றார். இதற்கிடையில் தான், பாஜகவின் அடுத்த டார்க்கெட் நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன்தான் என்பதுபோல் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், அமைச்சர் துரைமுருகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர் ‘நெக்ஸ்ட் நான் ரெடி ஆயிக்கறேன்’ என பதிவிட்டுள்ளார். இது தற்போது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்ப்படுத்தி இருக்கின்றது.