சென்னை அணியில் மீண்டும் டுபிளெசிஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தென்னாப்பிரிக்கா வீரர் டுபிளெசிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
மீண்டும் டி20 தொடர்
உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் டி20 லீக் தொடர்கள் சர்வதேச போட்டிகளை விட அதிகளவு வசூலை ஈட்டி தருவதால் மீண்டும் மீண்டும் நடத்துவதற்கு ஒவ்வொரு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றது.
ஐபிஎல், பிக்பாஸ் லீக், கரிபியன் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேச பிரீமியர் லீக் போன்ற தொடர்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.
அடுத்த வருடம் 2023 ஜனவரி முதல் பிப்ரவரி வரை 6 அணிகளை வைத்து CSA T20 தொடர் நடத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த 6 அணிகளையும் ஐபிஎல் அணிகளை ஏலம் எடுத்துள்ள முதலாளிகள் தான் இந்த அணிகளை வாங்கியுள்ளனர்.
கேப்டன் என்ற அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஜோஹன்னஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி வாங்கியுள்ளது.
பிரிட்டோரியாஅணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.
போர்ட் எலிசபெத் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
பார்ல் அணியை ராஜஸ்தான் ராயலஸ்ஸ்ரீ அணி வாங்கியுள்ளனர்.
சென்னை அணியில் டுபிளெசிஸ்
இதனால் இந்த தொடர் மத்த டி20 லீக் தொடர்களை விட இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் அதிக கவனத்தை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்து வரும் நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருக்கும் ஜோகன்னெஸ்பர்க் அணி, டுபிளெசிஸை தனது அணியில் இணைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டுபிளெசிஸ் ஏற்கனவே சென்னை அணியில் விளையாடியிருந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் இவரை பெங்களூர் அணி தேர்ந்தெடுத்துக் கொண்டது.
இருந்த போதும் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருக்கும் ஜோஹன்னஸ்பர்க் அணியில் டுபிளெசிஸ் இடம்பெற்றிருப்பது சென்னை ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.