துபாயிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்தல்...தஞ்சாவூரை சேர்ந்தவர் கைது

gold thanjavur dubai 20lakh
By Praveen May 09, 2021 04:24 PM GMT
Report

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புடைய 451 கிராம் மதிப்புடைய தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு,தஞ்சாவூரை சோ்ந்த பயணி கைது.

துபாயிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது தஞ்சாவூரை சோ்ந்த லியாக்கத்அலி(26) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 451 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.20 லட்சம்.இதையடுத்து பயணி லியாக்கத்அலியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.