தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil nadu TN Weather Weather
By Jiyath Jan 21, 2024 09:45 AM GMT
Report

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (21.01.2024) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் - வானிலை ஆய்வு மையம் தகவல்! | Dry Weather Will Prevail In Tamil Nadu Next 7 Days

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. 22.01.2024 முதல் 27.01.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உறைபனி 

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் - வானிலை ஆய்வு மையம் தகவல்! | Dry Weather Will Prevail In Tamil Nadu Next 7 Days

அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டத்திற்கு பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. இன்று மற்றும் நாளை (22.01.2024) நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.