அய்யய்யயோ ஆனந்தமே..சாலையில் திருநங்கையின் மடியில் படுத்துக் கொண்டு ரொமான்ஸ் - அடித்து விரட்டப்பட்ட மதுப்பிரியர்..!

Kanyakumari
By Thahir Jul 15, 2023 07:03 AM GMT
Report

கொளுத்தும் வெயிலில் சாலையோரம் திருநங்கையின் மடியில் படுத்துக் கொண்டு ரொமான்ஸ் செய்த மதுப்பிரியர் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் மடியில் படுத்துக் கொண்டு ரொமான்ஸ் 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள மதுக்கடைக்கு வரும் குடிமகன்கள் மது வாங்கி சாலையின் இருபுறங்களிலும் அமர்ந்து மது குடித்து விட்டு போதையில் அங்கேயே படுத்து துாங்குவதாகவும்,

ஒரு சில மதுப்பிரியர்கள் மது அருந்த வரும் திருநங்கைகளின் மடியில் படுத்துக் கொண்டு பல்லாண சேட்டைகளில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் திருநங்கையின் மடியில் படுத்துக் கொண்டு ரொமான்ஸ் செய்த மதுப்பிரியர் ஒருவரை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் அடித்து விரட்டினார்.

drunkard who romanced a transgender woman

அப்போது அந்த மதுப்பிரியரோ இது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் இல்லை என்பது போல திருநங்கையின் மடியில் இருந்து எழுந்திருக்க மறுத்த அடம் பிடித்தார்.

அடித்து விரட்டிய நபர் 

என்ன கருமம்டா இது...என்ற படி அந்த நபரோ திருநங்கையின் மடியில் படுத்திருந்த நபரை பிடித்து துாக்கி பக்கத்தில் இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டு மிதித்தார்.

கோபம் அடங்காத அந்த நபரோ பெரிய அளவிலான கல்லை துாக்கி கொண்டு வந்து ஓடிடு இல்லை உன் தலையிலையே போட்டிடுவேன் என்று கூறியுள்ளார்.

drunkard who romanced a transgender woman

ஒரு வேளை இவர் கல்லை போட்டுவிடுவாரோ என்ற அச்சத்தில் அந்த மதுப்பிரியர் எழுந்து ஓடினார். அந்த நபர் தன்னை ஒருவர் படம் பிடிப்பதை உணர்ந்து கல்லை கீழே போட்டார்.

பின்னர் அங்கிருந்து செல்லாமல் சாலையில் நின்ற மதுப்பிரியரை காலால் எட்டி உதைத்து அங்கிருந்து விரட்டினார். அடித்த அடியில் அங்கிருந்து ஓடினார் அந்த மதுப்பிரியர்.

இவ்வளவு சம்பவங்கள் நடந்த போதும் ஏதும் அறியாதவர் போல் நடந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் அவருடன் இருந்த திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.