இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்: மது போதையில் தாறுமாறாக கார் ஒட்டிய இளைஞர்கள் - விபத்தில் 4 பேர் பலி!

India Rajasthan Accident Death
By Jiyath Jan 07, 2024 07:17 AM GMT
Report

மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோர விபத்து

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரோஷன் குமார், பவானி சிங் ஆகியோர் மது அருந்திவிட்டு ஜெய்சால்மர் பகுதியிலிருந்து பார்மர் நோக்கி காரில் வேகமாக சென்றனர்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்: மது போதையில் தாறுமாறாக கார் ஒட்டிய இளைஞர்கள் - விபத்தில் 4 பேர் பலி! | Drunk Youths Speeding Car Kill Mother In Rajastan

மேலும் காரை வேகமாக ஓட்டுவதை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துப்படி சென்றுள்ளனர். அப்போது சாலையை கடக்க முயன்ற மென்கலா மற்றும் அவரது 13 வயது மகன் மீது கார் அதிவேகமாக மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

4 பேர் பலி

ஆனாலும் நிற்காமல் சென்ற கார் எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மது போதையில் காரை ஓட்டிய ரோஷன் குமார் மற்றும் பவானி சிங் ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்: மது போதையில் தாறுமாறாக கார் ஒட்டிய இளைஞர்கள் - விபத்தில் 4 பேர் பலி! | Drunk Youths Speeding Car Kill Mother In Rajastan

இதனால் பாலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.