குடி போதையில் வாலிபருக்கு தாலி கட்டி, முதலிரவுக்கு அழைத்து வந்த இளைஞர் - பின்பு நடந்த கூத்தைப் பாருங்க...

drunk திருமணம் youth-marriage குடிபோதை வாலிபர்கள் முதலிரவு பரபரப்புசம்பவம்
By Nandhini Apr 13, 2022 05:48 AM GMT
Report

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டம், ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் (23) தினமும் மது குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டு வந்துள்ளார்.

அப்போது, அந்த மதுக்கடையில் இவருக்கும், 21 வயது கொண்ட இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தினமும் மதுக்கடைக்குச் சென்று குடித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் குடி போதையில் அங்குள்ள கோவிலுக்குச் சென்றுள்ளனர். அந்த இடத்தில் மதுபோதையில் திருமணம் செய்து வாழ முடிவு செய்தனர்.

இதனையடுத்து, ஆட்டோ டிரைவர், அந்த வாலிபரின் கழுத்தில் தாலி கட்டினார். பிறகு மதுபோதையில் தாலியுடன் அவரை அழைத்துக்கொண்டு ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இருவரும் வந்து நின்றதைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது, அந்த ஆட்டோ டிரைவர் மதுபோதையில், நமக்கு கல்யாணம் ஆகிவிட்டது வா.. வீட்டில் இருவரும் சேர்ந்து முதலிரவு கொண்டாடலாம் என்று வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது பெற்றோர்கள் இவர்களை வீட்டை விட்டு அடித்து துரத்தினர்.

மறுநாள் ஆட்டோகாரருக்கு போதை தெளிந்தது. அப்போது அந்த இளைஞர் நடந்ததை கூறினார். அதிர்ச்சியான ஆட்டோ டிரைவர் அய்யோ... என்னை மன்னித்துவிடு... தெரியாமல் நடந்துவிட்டது. இனி நாம் இருவரும் வாழ முடியாது என்று கூறியுள்ளார்.

அந்த அந்த இளைஞர் என் வீட்டிலிருந்து என்னை துரத்திவிட்டார்கள். நீயும் இப்படி சொல்லிவிட்ட.. நீ நான் எங்கு போவேன்.. நான் தனியாக வாழ எனக்கு ரூ.1 லட்சம் கொடு என்று கேட்டுள்ளார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தாரும் தனியாக பேசி ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்து ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லை என எழுதி வாங்கிக் கொண்டனர்.

குடி போதையில் வாலிபருக்கு தாலி கட்டி, முதலிரவுக்கு அழைத்து வந்த இளைஞர் - பின்பு நடந்த கூத்தைப் பாருங்க... | Drunk Youth Marriage