செல்போனில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டிய டிரைவர்; பயத்தில் அலறிய பயணிகள்!

Cuddalore IPL 2024
By Swetha Mar 26, 2024 07:48 AM GMT
Report

பஸ் ஓட்டுநர் ஒருவர் செல்போனில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டே ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஸ் டிரைவர்

கடலூர் மாவட்டத்தில், 40 பயணிகளை கொண்ட தனியார் பேருந்து ஒன்று நேற்றிரவு விருத்தாசலம் நோக்கி புறப்பட்டது.

செல்போனில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டிய டிரைவர்; பயத்தில் அலறிய பயணிகள்! | Driver Drove The Bus While Watching Cricket

அப்போது, பஸ் ஓட்டுநர் தனது செல்போனில் மிகவும் சுவாரசியமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை-குஜராத் அணிகள் மோதிய போட்டியை பார்த்தபடியே அலட்சியமாக பஸ்ஸை ஓட்டியுள்ளார்.

அந்த பஸ், 2 முறை முன்னால் சென்ற கார் மற்றும் அரசு பஸ் மீது மோதுவதுபோல் சென்றுள்ளது. இதனை டிரைவரின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பயணி பார்த்து கூச்சலிட்டதில் டிரைவரின் கவனம் திரும்பியது. உடனே பிரேக் போட்டதால் பஸ் விபத்தில் இருந்து தப்பியது.

100 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசய சந்திர கிரகணம்! இந்தியாவில் தென்படுமா? எங்கு எப்படி?

100 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசய சந்திர கிரகணம்! இந்தியாவில் தென்படுமா? எங்கு எப்படி?

அலறிய பயணிகள்

அதே நேரத்தில், பஸ்சில் தங்களது இருக்கைகளில் இருந்து பயணிகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, பயணிகளில் சிலர் டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

செல்போனில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டிய டிரைவர்; பயத்தில் அலறிய பயணிகள்! | Driver Drove The Bus While Watching Cricket

இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் டிரைவர், தொடர்ந்து அப்படியே பஸ்சை ஓட்டியுள்ளார். இதனால் பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து, பஸ் நிலையத்துக்கு வந்ததும் சம்பந்தப்பட்ட தனியார் பஸ் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டிய டிரைவரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.