கனவை கட்டுப்படுத்த ட்ரில்லரால் மூளையை துளையிட்டு சிப்பை பொருத்திய விநோத மனிதர் - அதிர்ச்சி சம்பவம்!

World Russia
By Jiyath Jul 23, 2023 07:12 AM GMT
Report

கனவுகளை கட்டுப்படுத்த மூளைக்குள் துளையிட்டு எலக்ட்ரானிக் சிப்பை பொறுத்தியுள்ளார் விநோத மனிதர் ஒருவர்.

மூளைக்குள் சிப்

சேர்ந்தவர் 40 வயதான மைக்கேல் ரடுகா. இவர் மனிதர்களுக்கு ஏற்படும் உறக்கம் மற்றும் பக்கவாதம் குறித்த ஆராய்ச்சிக்காக "பேஸ் ஆராய்ச்சி மையத்தை" நடத்தி வருகிறார். மனிதர்களுக்கு தூக்கத்தில் வரும் கனவுகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியுமா என்ற விநோத சிந்தனை மைக்கேலுக்கு தோன்றியுள்ளது.

கனவை கட்டுப்படுத்த ட்ரில்லரால் மூளையை துளையிட்டு சிப்பை பொருத்திய விநோத மனிதர் - அதிர்ச்சி சம்பவம்! | Drilling Chip Inside Brain In Surgery Home Ibc

இவர் கனவு மற்றும் தூக்கம் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது ஏராளமான பார்வையாளர்களைக் கவர்ந்ததால் இதன் அடுத்த கட்டமாக தனது மூளைக்குள் துளையிட்டு எலக்ட்ரானிக் சிப்பை பொருத்தும் விபாரீத செயலுக்கு சென்றுள்ளார் மைக்கேல். இதற்காக அவர் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் துளையிடும் இயந்திரத்தை எடுத்து மூளைக்குள் துளையிட்டுள்ளார்.

கனவை கட்டுப்படுத்த ட்ரில்லரால் மூளையை துளையிட்டு சிப்பை பொருத்திய விநோத மனிதர் - அதிர்ச்சி சம்பவம்! | Drilling Chip Inside Brain In Surgery Home Ibc

இந்த விபரீத செயலினால் அவரது தலையில் இருந்து ரத்தம் பீறிக்கொண்டு வெளியேற ஆரம்பித்துள்ளது. அதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று தெரிந்தும் இந்த விநோத மனிதர் கிட்டத்தட்ட 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து தனது மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப்பை பொறுத்தியுள்ளார்.

அகற்றம்

இந்நிலையில், அவர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் "தான் யூடியூபில் உள்ள வீடியோக்களை பார்த்து சொந்தமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மூளைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிப்பை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து மைக்கேல் "மனிதர்களுக்கு ஏற்படும் கனவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அராய்ச்சிக்கான தனது முதல் முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளதாக" டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.