நவீன காலத்தின் ரிஷி சத்குரு : மகாசிவராத்திரி விழாவில் திரௌபதி முர்மு பேச்சு

Draupadi Murmu
By Irumporai Feb 19, 2023 04:38 AM GMT
Report

முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் உள்ளார் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

ஈஷாவில் குடியரசுத்தலைவர்

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஓம் நமசிவாய சிவனாக இருக்கும் அனைத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இந்த புனித மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதை ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன்

சிவன் தான் முதல் யோகி

சிவன் தான் இந்த உலகின் முதல் யோகி மற்றும் முதல் ஞானி. சிவன் கருணை கடவுளாகவும், ஆக்ரோஷமான வடிவமாகவும் இருக்கிறார். முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகவும் சிவன் விளங்குகிறார் நவீன காலத்தின் போற்ற தக்க ரிஷியாக விளங்கும் சத்குரு அவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நம்முடைய ஆன்மீக அம்சங்களை எண்ணிலடங்கா மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார்.

நவீன காலத்தின் ரிஷி சத்குரு : மகாசிவராத்திரி விழாவில் திரௌபதி முர்மு பேச்சு | Draupadi Murmu Speech Mahashivaratri Shiva

குறிப்பாக ஏராளமான இளைஞர்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கும் யோகியாகவும் இருக்கிறார். அவருடைய பேச்சு மற்றும் செயல்கள் மூலம் ஆன்மீகம் மட்டுமின்றி சமூக பொறுப்புணர்வையும் கற்றுக்கொடுக்கிறார். சுற்றுச்சூழல் சார்ந்த பல பணிகளையும் அவர் முன்னெடுத்துள்ளார்.

இந்த மஹா சிவராத்திரி நன்நாள் நமக்குள் இருக்கும் இருளை அகற்றட்டும். மேலும் வளர்ச்சியும் நிறைவும் நிறைந்த வாழ்வை நமக்களிக்கட்டும். இந்த மஹா சிவராத்திரியின் நல்லொளி நம் ஒவ்வொரு நாளின் பாதையையும் பிரகாசமாக்கட்டும் என்று தெரிவித்தார்.