தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம்..!

COVID-19 Face Mask
By Thahir Apr 22, 2022 05:49 AM GMT
Report

தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளதாக கூறினார்.

மேலும் அவர் கொரோனா அதிகரிப்பால் மக்கள் பதற்றம் அடைய தேவை இல்லை என மத்திய அரசே கூறியுள்ளது என்றார்.

சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்.

பேருந்துகளில் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் பயணிக்கின்றன. எனவே பொதுமக்கள் பொதுஇடங்களில் மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.