சரசரவென சரிந்த மண்.. காணமல் போன பொதுமக்கள் : நிலச்சரிவில் சிக்கியவர்களின் நிலை என்ன?
Malaysia
Earthquake
By Irumporai
மலேசியா நாட்டின் தலை நகரில் கோலம்பூர் அருகே உள்ள பதங்கலி என்ற நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது, இந்த பண்ணை அருகே பல கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.
மலேசியாவில் நிலச்சரிவு
இந்த நிலையில் வேளாண் பண்ணையில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது, இதில் 79 பேர் சிக்கிகொண்டனர்.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் , விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மீட்பு பணியில் அதிகாரிகள்
இது வரை விபத்தில் சிக்கிய 26 நபர்களை உயிருடன் மீட்டுள்ளனர். அதே சமயம் இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதே சமயம் மண்ணில் புதைந்துள்ள 51 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
50 க்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்துள்ளதால் உயிரிப்பு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது.