வரதட்சணை கொடுக்க மறுத்த பெண் : கஷாயம் கொடுத்து கருவை கலைத்த கொடூர குடும்பம்

forcefulabortion husbandwife dowrytorture cuddalorecrime
By Swetha Subash Mar 16, 2022 02:15 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

கடலூரில் வரதட்சணை கேட்டு கொடுமை பெண் வன அலுவலருக்கு கசாயம் கொடுத்து கருக்கலைப்பு கணவர், மாமியார் கைது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தையா நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் சரவணன்.

வரதட்சணை  கொடுக்க மறுத்த பெண் : கஷாயம் கொடுத்து கருவை கலைத்த கொடூர குடும்பம் | Dowry Torture Leads To Abortion In Cuddalore

தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும், வடலூர் ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவரும், நெய்வேலியில் வன அலுவலராக பணிபுரிபவருமான நர்மதா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் சரவணனுக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர்.

இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் பெற்றோர் வீட்டில் இருந்து 25 பவுன் நகையும், ரூ.5 லட்சமும் கூடுதல் வரதட்சணையாக வாங்கி வரும்படி கேட்டு நர்மதாவை, சரவணனின் குடும்பத்தினர் துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

வரதட்சணை  கொடுக்க மறுத்த பெண் : கஷாயம் கொடுத்து கருவை கலைத்த கொடூர குடும்பம் | Dowry Torture Leads To Abortion In Cuddalore

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதற்கிடையே நர்மதா கர்ப்பமானார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, சரவணனின் குடும்பத்தினர் கஷாயம் போன்ற திரவத்தை கட்டாயப்படுத்தி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் அவரது கர்ப்பம் கலைந்தது. இதுகுறித்து நர்மதா திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சரவணன், மற்றும் அவரின் தாய் மல்லிகா, இவரது மகள்கள் ரேவதி, கவிதா என்கிற பூரணி ஆகியோர் மீது திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்தார்.

இதில் சரவணன், மல்லிகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.