பிரபல டபுள் டெக்கர் பஸ் இனி கிடையாது - அறிவிப்பால் அதிர்ந்துபோன சுற்றுலா பயணிகள்!
இனி டபுள் டெக்கர் பஸ் குறையப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டபுள் டெக்கர் பஸ்
மும்பையில் இரண்டு அடுக்கு பேருந்துகள் பிரபலமானது. மும்பையைத் தளமாகக் கொண்ட தமிழ், ஹிந்தி படங்களில் இந்த பேருந்துகளை பார்த்திருப்போம். கடந்த நூற்றாண்டில் மும்பை போக்குவரத்து மற்றும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்காக டபுள் டெக்கர் பேருந்துகள் நகரத்தின் சாலைகளில் அதிகம் உலா வந்தது.
ஆனால் தற்போது ஒற்றை அடுக்கு பேருந்துகள் முதன்மையாக புறநகர்ப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டன. ஒரு கட்டத்தில், இரட்டை அடுக்கு பேருந்துகளின் எண்ணிக்கை 242 ஆக இருந்தது. தற்போது இந்த பேருந்துகள் படிப்படியாக குறைந்து வருகிறது.
போக்குவரத்து கழகம் அறிவிப்பு
மும்பையின் புகழ்பெற்ற டபுள் டெக்கர் பேருந்துகள் செப்டம்பர் 15 ஆம் தனது தேதி கடைசி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. கேட்வே ஆஃப் இந்தியாவிற்கும் மரைன் டிரைவிற்கும் சவாரிக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் டபுள் டெக்கர்களும் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் என்று மும்பை போக்குவரத்துக்கு பிரிவு அறிவித்துள்ளது.
இனி வரும் நாட்களில் சுற்றுலா வழித்தடங்களில் மின்சார குளிரூட்டப்பட்ட டபுள் டெக்கர்களை பெஸ்ட் அறிமுகப்படுத்த உள்ளது. புதிதாக வரும் 18 குளிரூட்டப்பட்ட டபுள் டெக்கர்களில் புறநகர்ப் பகுதிகளுக்கு 10 மற்றும் தெற்கு மும்பைக்கு 8 ஒதுக்கப்பட்டுள்ளது.