இந்தியாவின் அந்த கனவு பலிக்காது - டிரம்ப் திட்டவட்டம்
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் கனவு பலிக்காது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புதிய கரன்சி
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று உள்ளார். உடனே, சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
உலக அளவில் அமெரிக்காவை உச்சத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறினார். இதற்கிடையில் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் மாநாட்டில் புதிய கரன்சியை கொண்டு வர திட்டமிடப்பட்டது.
இதில் ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உள்ளது. இதனால் உலக நாடுகள் பல டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியில் வர்த்தகம் செய்யும் என கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும். மற்ற நாடுகளின் கரன்சி மதிப்பு உயருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் உறுதி
இந்நிலையில், புளோரிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டொனால்ட் டிரம்ப், டாலருக்கு எதிரான பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் கனவு பலிக்காது. இந்தியா, சீனா மற்றும் பிரேசில் கூட்டமைப்பு நாடுகள் மிகப்பெரிய வரி விதிப்பாளர்கள். தனது அரசாங்கம் மேற்கண்ட நாடுகளை இந்தப் பாதையில் தொடர அனுமதிக்காது.
அமெரிக்காவை முதலிடத்தில் வைப்பதால் நாங்கள் இனி அதை நடக்க விடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு பயணம்செய்ய உள்ளதாகவும், அப்போது டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
