ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட டால்பின்கள்

Murder Dolphins Festivel
By Thahir Sep 15, 2021 03:33 AM GMT
Report

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபேரோ தீவில் ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டன.

பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள், படகுகள் மூலம் 1,428 டால்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர்.

ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட டால்பின்கள் | Dolphins Murder Festivel

பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்தனர். இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும், ரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.