இறந்த உரிமையாளர்; ஹாஸ்பிட்டலில் காத்துக் கிடந்த நாய் - மனதை உருக்கும் சம்பவம்!

Philippines
By Sumathi Oct 25, 2023 06:37 AM GMT
Report

நாய் ஒன்று மருத்துவமனையில் காத்துக்கிடந்த சம்பவம் நெஞ்சை உருகச் செய்துள்ளது.

உரிமையாளர் மறைவு

பிலிப்பைன்ஸ், கலூகன் பகுதியில் உள்ள மணிலா மத்திய பல்கலைக்கழக மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக நபர் ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார்.

dog waited for dead owner

தொடர்ந்து, இவரது நாய் மோர்கன் அவர் அங்கு சிகிச்சை பெறும் வரையிலும் இரவு, பகலாக மருத்துவமனை வாசலில் படுத்துக் கொண்டிருந்தது. ஆனால், உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நள்ளிரவில் திடீரென பற்றி எறிந்த வீடு - உயிரை காப்பாற்றிய நாய்!

நள்ளிரவில் திடீரென பற்றி எறிந்த வீடு - உயிரை காப்பாற்றிய நாய்!

காத்துக் கிடந்த நாய்

அதனை அந்த நாய்க்கு பிரியும் வகையில் எடுத்துச் சொல்லி, அதனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முயற்சி செய்தனர். மிகவும் சிரமப்ப்பட்டு வீட்டுக்கு அழைத்தும் சென்றனர்.

philippines

ஆனால், உரிமையாளரை காண வேண்டும் என மீண்டும் நாய் மருத்துவமனைக்கே வந்துவிட்டது. தொடர்ந்து பலமுறை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மணமுடைந்து போன மோர்கனின் உடல் எடை இதனால் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

எனவே, விலங்கு நல பராமரிப்பு அமைப்பு ஒன்று அதனை அவர்களுடைய காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி காண்போரின் மனதை உருகச் செய்துள்ளது.