விடாமல் கொட்டி தீர்த்த கனமழை - குட்டிகளை கவ்வி காப்பற்றிய தாய்! வீடியோ வைரல்
ஈரோட்டில் வறண்டு போன கால்வாயில் தனது குட்டிகளுடன் தங்கி இருந்த நாய் ஒன்று திடீரென பெய்த மழையால் நடுங்கி கொண்டே தனது குட்டிகளை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி கொண்டு பாதுகாப்பான இடத்தில் விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பெரியார் நகர் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில், 6 குட்டிகளுடன் நாய் ஒன்று வசித்து வந்துள்ளது. திடீரென நேற்று பெய்த கனமழையால், பதறி போன அந்த நாய், குட்டிகளை பாதுகாக்க வேண்டுமென்று ஒவ்வொரு குட்டிகளாக வாயில் கவ்வி பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்தது.
ஆனால் தாயின் பேச்சை கேக்காமல் துள்ளி துள்ளி ஓடும் அந்த குட்டிகளை கண்டு கோபம் அடையாமல் ஒவ்வொரு குட்டியாக பத்திரமாக தூக்கி சென்று பாதுகாப்பான இடத்தில் விட்டது.
இந்த தாய் நாயின் பாசத்தை கண்ட பொதுமக்கள் பலரும் நெகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.