ஓனரை காப்பாற்ற துடிதுடித்து உயிரைக் கொடுத்த நாய் - பாம்புடன் போராடியதில் சோகம்!

Chennai
By Sumathi Sep 28, 2023 10:16 AM GMT
Report

ஓனரை காப்பாற்றிய நாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாம்புடன் போராட்டம் 

சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர்கள் மதிவாணன் - நந்தினி தம்பதி. இவர்கள், தங்களது வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்தனர். அவற்றை மேக், டாம் என அழைத்து வந்தனர்.

ஓனரை காப்பாற்ற துடிதுடித்து உயிரைக் கொடுத்த நாய் - பாம்புடன் போராடியதில் சோகம்! | Dog Died After Saves His Owner From Snake Chennai

இந்நிலையில், மதிவாணன் வேலைக்கு சென்ற நிலையில், மனைவி நந்தினி வீட்டில் தனியாக வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அதிக சத்தத்துடன் குறைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடியுள்ளது.

உயிரைவிட்ட நாய்

இதனை பார்த்த நந்தினியை வீட்டின் பின்புறத்திற்கு செல்ல விடாமல் தடுத்துள்ளது. அதில், அவர் என்னவென்று சென்று பார்த்ததில் தான் ஐந்து அடி நீளமுள்ள நாகப்பாம்பு வீட்டில் புகுந்திருப்பது தெரியவந்தது.

ஓனரை காப்பாற்ற துடிதுடித்து உயிரைக் கொடுத்த நாய் - பாம்புடன் போராடியதில் சோகம்! | Dog Died After Saves His Owner From Snake Chennai

நாய்கள் பாம்புடன் சண்டைபோட்டுள்ளன. தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகளை போன் செய்து நந்தினி அழைத்துள்ளார். பாம்பு பிடி வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோதும், இரு நாய்களும் பாம்புடன் அரை மணி நேரமாக போராடி அதனை கடித்து குதறின.

வளர்த்தவர் இறந்தது தெரியாமல் 3 மாதங்களாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் நாய்

வளர்த்தவர் இறந்தது தெரியாமல் 3 மாதங்களாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் நாய்

அதில், பாம்பு கொத்தியதில், மேக் என்ற நாய்க்கு விஷம் ஏறி வாயில் நுரைதள்ளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இதற்கிடையில், யே பாம்பை பிடித்து வனத்துறையினர் காட்டுக்குள் விட்டனர். இச்சம்பவம், ஆச்சர்யத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.