“இது கொலை இல்ல வஞ்சம்” : குரங்குகள்-நாய்களுக்கிடையே வெடித்த மகா யுத்தம்

fight dog & monkey monkey kills 250 puppies avenge
By Swetha Subash Dec 19, 2021 08:36 AM GMT
Report

தங்கள் குட்டியை நாய்கள் கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக, 250 நாய்க்குட்டிகளை குரங்குகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் இருக்கிறது லலூல் கிராமம். குட்டியாக இருக்கும்போதே இந்தப் பகுதியில் வளர்ந்து வந்த இரண்டு குரங்குகள் அனைவருக்கும் பழக்கம்.

சில மாதங்களுக்கு முன்பு, இந்த குரங்குகளின் குட்டி ஒன்றை சில நாய்கள் கடித்துக் கொன்றுவிட்டன.

இதனால் ஆத்திரமடைந்த இந்த குரங்குகள், அந்தப் பகுதியில் எங்கு நாய்க்குட்டிகள் தென்பட்டாலும் அவற்றை, அருகில் உள்ள மலை அல்லது உயரமான இடத்துக்குத் தூக்கிச் சென்று கீழே போட்டு கொன்றுவிடுமாம்.

இப்படி சுமார் 250 நாய்க்குட்டிகளை இந்த குரங்குகள் கொன்றுள்ளது.

முதலில் நாய்க்குட்டிகளை காணாததால், தேடிய அந்தப் பகுதியினர் பின்னர் இந்த குரங்குகள் தூக்கிச் சென்று கொல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பழிவாங்கும் நடவடிக்கையாக அவை இப்படி செய்வதை அறிந்த அந்தப் பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த அவர்கள், கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து, காட்டுக்குள் கொண்டு விட்டுள்ளனர்.

இதுபற்றி பீட் மாவட்ட வன அதிகாரி சச்சின் கண்ட் கூறும்போது, 2 குரங்குகள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளன.

நாக்பூர் வன அதிகாரிகள் அவற்றை பிடித்து அங்குள்ள காட்டுக்குள் விட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களில் 250 நாய்க்குட்டிகளை இந்த குரங்குகள் கொன்றிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது' என்றார்.