இந்தியா - பாரதம்..இரண்டு பெயர்களிலும் பிரச்சனை இல்லை...ராகுல் காந்தி..!!

Indian National Congress Rahul Gandhi BJP Narendra Modi India
By Karthick Sep 11, 2023 03:54 AM GMT
Report

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடத்து ஆளும் கட்சிக்கு எரிச்சலை கொடுத்திருக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாரத் விவகாரம்

ஜி 20 மாநாடு அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என அச்சிடப்படாமல், பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி நிலையில், இந்தியா என்ற பெயர் மாற்றப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்தன.

not-having-problem-with-bharath-says-ragul-gandhi

அதனை உறுதிப்படுத்தும் வகையில் பாஜகவினர் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியின் மேஜையில் பாரத் என்ற பெயரே இடம்பெற்றிருந்தது. இதன் காரணமாக நிச்சயமாக நாட்டின் பெயர் மாற்றப்படுகிறது என வலுவாக பேசப்பட்டு வரும் நிலையில், அது குறித்து ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரச்சனை இல்லை

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அந்நாட்டு மாணவர்களைச் சந்தித்துப் கலந்துரையாடினர். இரண்டு பெயர்களிலும் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய ராகுல், அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டு பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டினார்.

not-having-problem-with-bharath-says-ragul-gandhi

இந்தியா, என்கிற பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்றுதான் தொடங்குகிறது என தெரிவித்து, தான் உண்மையில் அதில் எந்த பிரச்சனையும் இருப்பதாகப் பார்க்கவில்லை என்றும் இரண்டு வார்த்தைகளும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை தான் என தெரிவித்தார்.

not-having-problem-with-bharath-says-ragul-gandhi

இருப்பினும், எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயரிட்டது ஆளும் கட்சியை எரிச்சலடையச் செய்திருக்கலாம் என்று நினைப்பதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தாம் இந்து மதம் தொடர்பான புத்தகங்களைப் படித்திருப்பதாவும், அதில் கூறப்பட்டுள்ளதை எல்லாம் பாஜகவினர் பின்பற்றவில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்து பேசினார்.