சிகிச்சையில் 55 வயது முதியவர் வயிற்றை கிழித்து பார்த்தபோது... - அதிர்ச்சியில் வாயடைத்த மருத்துவர்கள் - நடந்தது என்ன?
பீகார் மாநிலம், முசாஃபர் நகரை சேர்ந்த 55 வயது முதியவர் மலச்சிக்கலால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு வந்தார்.
மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த அவர் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, அவர் வயிற்றுக்குள் ஒரு பெரிய பொருள் இருப்பதை கண்டறிந்தனர்.
அந்தப் பொருள் குடல் பகுதியில் இருந்ததால், ஆசன வாய் வழியாக அப்பொருளை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால், அந்த வழியாக அப்பொருள் வெளியே வரவில்லை. பிறகு, அந்த முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்து அப்பொருளை வெளியே எடுத்தனர். அப்போது, அந்த பொருள் டீ குடிக்கும் டம்பளர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, மருத்துவர்கள் முதியவரின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த உறவினர்கள் டீ குடிக்கும்போது அந்த டம்ளர் அவர் வயிற்றுக்குள் சென்றிருக்கும் என்று கூறினார். ஆனால், இதை ஏற்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
அவரது தொண்டை உணவு குழாய் பகுதி டம்பளர் செல்லும் அளவிற்கு பெரிதாக இல்லை. இது சாத்தியமாகாது என்று தெரிவித்தனர். இது எப்படி சாத்தியம் என்று மருத்துவர்கள் யோசனை செய்தனர்.
அதற்கு ஒரே ஒரு வழி தான் இருந்துள்ளது. இந்த டம்ளரை அவரது ஆசன வாய் வழியாக மட்டும் தான் உள்ள அனுப்பியிருக்க முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அவரது குடும்பத்தினர் இது குறித்த தகவல்களை எதையும் பகிர மறுத்து விட்டனர். அவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் அவரது குடும்பம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.