பல நாடுகளில் பெண்களை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர் - அதிர்ந்த போலீசார்!
மயக்க மருந்து கொடுத்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம்
அமெரிக்காவின் அஸ்டோரியா பகுதியில் வசித்து வருபவர் 33 வயதான ஜி ஆலன் செங் (Zhi Alan Cheng). இவர் நியூயார்க் நகரிலுள்ள நியூயார்க் ப்ரெஸ்பிடேரியன் குயின்ஸ் மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணராக பனி புரிந்தவர்.
இவர் தனது காதலியை வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்கமடையச் செய்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மயக்க நிலையில் இருந்து தெளிந்த பெண் எழுந்து பார்த்ததும் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு அங்கு ஒரு வீடியோ கிடைத்துள்ளது.
அந்த வீடியோவில் டாக்டர் செங் தன்னை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதுமட்டுமல்லாமல் டாக்டர் வேறு சில பெண்களையும் பாலியல் துன்புறுத்தல் செய்வதும் பதிவாகியிருந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து டாக்டர் செங்கை மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் டாக்டரின் லேப்டாப், போன் போன்ற உடைமைகளைச் போலீசார் சோதனை செய்தபோது மருத்துவமனையிலும், வீட்டிலும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது பதிவாகியிருந்தது.
தாய்லாந்து, நியூயார்க், லாஸ் வேகாஸ், ஸான் பிரான்ஸிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல் அறைகளிலும், வீடுகளிலும் இவரால் பாதிக்கப்பட்ட 5 பேரை காவல்துறை தேடி வருவதாகவும் தெரிகிறது. மேலும் அவர் வீட்டை சோதனை செய்தபோது பல்வேறு விதமான மயக்க மருந்துகள் மற்றும் போதை மருந்துகளும் சிக்கியுள்ளது. இதனால் டாக்டர் செங் மீது 50 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்களையும் போலீசார் கண்டறிய முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் இந்த குற்றச் சாட்டுகள் அனைத்தையும் டாக்டர் செங் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.