மக்களே ஜாக்கிரதை..account இல் இருந்து எடுக்கப்படும் ரூ.295- அதிகரிக்கும் குற்றசாட்டு!

SBI Social Media
By Swetha Apr 20, 2024 02:32 PM GMT
Report

வங்கி கணக்கில் இருந்து ரூ.295 எடுக்கப்படுவதாக SBI வங்கி வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எடுக்கப்படும் ரூ.295 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஒரு பொதுத்துறை வங்கியாகும்.இதில் ஏராளமான மக்கள் வங்கி கணக்குகள் வைத்துள்ளனர். இந்த வங்கிஇந்தியா முழுவதும் கிளைகளை நடத்தி வருகிறது. SBI வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் என பல சலுகைகள் கொடுக்கப்படுவதால் அதிகளவு வாடிக்கையாளர்கள் இங்கு உண்டு.

மக்களே ஜாக்கிரதை..account இல் இருந்து எடுக்கப்படும் ரூ.295- அதிகரிக்கும் குற்றசாட்டு! | Do You Know Why 295 Rupees Detected From Account

இந்த நிலையில், தங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.295 எந்த முன் அறிவிப்பும் இன்றி எடுக்கப்படுவதாக பல தரப்பில் குற்றசாட்டுகள் வருகிறது. இந்த பணம் கழிக்கப்படுவதை குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என வாடிக்கையாளர்கள் பலர் இணையத்தில் புகார் தெரிவித்தனர்.

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை : எஸ்பிஐ அறிவிப்பு

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை : எஸ்பிஐ அறிவிப்பு

மக்களே ஜாக்கிரதை

இந்தவித தகவலும் இல்லாமல் ரூ.295 எடுக்கப்படுவது ஏன் என பல்வேறு தரப்பினரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த பிரச்னைக்கு காரணம், நீங்கள் மாதத்தவணை முறையில் எதையாவது வாங்கினால் அந்த EMI விவரங்களை கவனிக்கும் பகுதிதான் National Automated Clearing House (NACH) என்பதாகும்.

மக்களே ஜாக்கிரதை..account இல் இருந்து எடுக்கப்படும் ரூ.295- அதிகரிக்கும் குற்றசாட்டு! | Do You Know Why 295 Rupees Detected From Account

அதாவது நீங்கள் EMI செலுத்த வேண்டிய தொகை அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருநாள் முன்னதாகவும் உங்கள் அக்கவுண்டில் இருக்க வேண்டும். இதை NACH கவனித்திக்கொண்டிருக்கும். ஒரு வேலை அதை கட்ட தவறினால் அபராதமாக ரூ.250 எடுக்கப்படும். அதற்கு வரி சேர்த்து மொத்தமாக ரூ.295 எடுக்கப்படுகிறது. எனவே இப்படி பணம் போவதை தடுக்க கருதினால் உங்கள் EMI தொகையை சரியாக உங்கள் கணக்கில் வைத்திருங்கள்.