எனது மருமகள் நயன்தாரா எப்படிபட்டவள் தெரியுமா? ஓப்பனாக பேசிய மாமியார்

Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By Thahir Nov 25, 2022 04:03 PM GMT
Report

நயன்தாரா பற்றி அவரது மாமியார் மீனாகுமாரி பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசியுள்ளார்.

சினிமாவில் அறிமுகம் 

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை நயன்தாரா கடந்த 2004 ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் சூப்பர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்திலும் நடித்தார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

Do you know what Nayantara looks like? The mother-in-law who spoke

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விஜய், அஜித், சூர்யா, சிம்பு, போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா.

திருமணம் - குழந்தை சர்ச்சை 

இந்த நிலையில் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடித்தன் மூலம் அப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது.

7 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜுன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

Do you know what Nayantara looks like? The mother-in-law who spoke

இந்த நிலையில் திருமணம் முடிந்து 4 மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தததாக அறிவித்தனர். 

இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இது பற்றி விசாரிக்க சுகாதாரத்துறையினருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணி உத்தரவிட்டார்.

விசாரணையில் 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021 ஆம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் தெரியவந்தது. 

நயன்தாரா பற்றி மனம் திறந்த மாமியார்

இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரி தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர்.

Do you know what Nayantara looks like? The mother-in-law who spoke

தனது தாயின் ரியல் கேரக்டரை தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெறும் ராதிகா கதாபாத்திரமாக பயன்படுத்தி இருப்பார்.

அந்த அளவு பாசமான தாயாக இருந்து வரும் மீனாகுமாரி, தனது மருமகள் நயன்தாரா, குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். 

அவர் கூறியதாவது : “நயன்தாரா வீட்டில் 4 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 8 பேர் பணியாற்றி வருகின்றனர்.

அதில் ஒரு பணிப்பெண் மட்டும் ஒருநாள் சோகமாக இருந்ததை கவனித்த நயன்தாரா, அவரிடம் என்ன பிரச்சனை என விசாரித்தார்.

அப்போது அந்த பெண் தனக்கு 4 லட்சம் ரூபாய் கடன் இருப்பதை கூறினார். உடனடியாக 4 லட்சத்தைக் கொடுத்து கடனை அடைக்குமாறு சொன்னார் நயன்தாரா.

இதையெல்லாம் நான் அருகிலிருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். அவர் நடிகை தானே, கொடுக்கலாம் என நினைக்கலாம்.

ஆனால் அப்படி கொடுப்பதற்கு ஒரு மனசு வேண்டும். அந்த பெண்ணும் நேர்மையாக உழைச்சிருக்காங்க. நயன்தாராவின் அம்மா கேரளாவில் இருந்து வந்தபோது கூட அந்த பணிப்பெண்ணுக்கு தங்க வளையல் போட்டாங்க.

நயன்தாரா வசிக்கும் குடியிருப்பை சுற்றி கேமரா இருக்கிறது. நயன்தாராவிடம் கேட்காமல் அந்த பெண் எதையும் செய்ய மாட்டார்.

யாரா இருந்தாலும் நம்பிக்கையா இருந்தா நல்லது கெட்டதை அவங்க பார்த்துப்பாங்க” என தனது மருமகள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார் விக்னேஷ் சிவனின் தாயார்.