நீங்க பண்ணா சரி, வனிதா பண்ணா தப்பா? ரவீந்தர் மகாலட்சுமி கொடுத்த பதிலடி
நீங்க பண்ணா சரி, வனிதா பண்ணா தப்பா? என்ற நெறியாளரின் கேள்விக்கு ரவீந்தர் மகாலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.
திருமணம்
தொகுப்பாளராக அறிமுகமான மகாலட்சுமி சின்னத்திரையிலும் நடிகையாக வலம் வருகிறார். மகாலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் குறித்த பதிவுகள்தான் சோசியல் மீடியாவின் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் அவருக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இவர்களின் திருமணம் குறித்தான நூல்கள் மீம்ஸ் உள்ளிட்ட பல பதிவுகள் சமூக வலை தளத்தை ஆக்கிரமித்துள்ளது. திருமணம் பற்றிய விமர்சனங்கள் குறித்து பேட்டி அளித்து வருகின்றனர்.
வனிதாவுடன் மோதல்
வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் கொல்ல முயன்ற போது ரவீந்தர் அதை கடுமையாக எதிர்த்தார். ஏனென்றால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்த நிலையில், விவாகரத்து கூட பெறாமல் வனிதாவை அவர் மூன்றாவது திருமணம் செய்தார்.
இதனால் பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவாகவும், வனிதாவிற்கு எதிராகவும் ரவீந்தர் பல கருத்துக்களை கூறி வந்தார்.
இதனால் ரவீந்திரருக்கும், வனிதாவுக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இருவரும் கடுமையான வார்த்தைப் மோதல்களில் ஈடுபட்டனர்.
இது குறித்து கேள்வி கேட்ட நெறியாளர், வனிதாவிற்கு ஒரு நியாயம்? உங்களுக்கு ஒரு நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.
இன்னொரு கல்யாணம் வேண்டாம்
அப்போது கூறிய ரவிந்தர் என் திருமணத்தால் யாரும் அழவில்லை, நாங்கள் முறையாக விவாகரத்து பெற்ற பின் தான் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் வனிதா விஷயம் அப்படி இல்லை என்று வனிதா பற்றி பல கருத்துக்களை தொடர்ந்து கூறினார். அப்போது பேசிய ரவீந்தர்,
ரவீந்தர் யாரு கண்ணீரிலும் இன்னொரு கல்யாணம் வேண்டாம் என சொன்னேன். நான் கல்யாணம் பண்ணே யாராவது அழுகுறாங்களா? யாராச்சும் ஏமாத்திட்டனு சொல்ராங்களா?
ஒரு நேர்காணலில் சினிமாவில் நடிப்பவர்களுக்கு லோன், மற்றும் வீடு ஏன் கொடுப்பதில்லை என்றால் நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் உள்ளது என்று தெரியாமல் சொல்லிட்டேன்.
அப்போது வனிதா வாழ்க்கை இப்போ தான் மலர போகிறது அப்படி மலரும் போது யாருடைய சாபமும் வேண்டாம்.. விவாகரத்து செய்திட்டு கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று கூறியிருந்தேன்.
அதன் பின் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி என்னை அவுங்க உரச.. நான் அவுங்கள உரச என போக அவுங்க குடும்பத்தை காப்பற்ற போகிவிட்டேன் என தெரிவித்தார்.