தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ .. தள்ளிநில் இந்தியே : கவிஞர் வைரமுத்து
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மொழிப்போர் தியாகிகள் தினம்
தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும்.

தள்ளிநில் இந்தியே
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் தனது ட்விட்டர் பதிவில் மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்.
மொழிப்போர் வீரர்களை
— வைரமுத்து (@Vairamuthu) January 25, 2023
நெற்றி நிலம்பட
வணங்குகிறோம்
கண்ணகி
மதுரையில் இட்ட
நெருப்புக்குப் பிறகு
தமிழ்நாட்டைச் சுட்டது
தமிழுக்காக
எங்கள் மறவர்கள்
தேகத்தில்
மூட்டிக்கொண்ட தீ தான்
தேகங்கள்
அணைந்துவிட்டன
தீ அப்படியே
செந்தீயைத் தீண்டாதே
தள்ளிநில் இந்தியே#தமிழ் | #தமிழ்நாடு
கண்ணகிமதுரையில் இட்ட நெருப்புக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சுட்டது தமிழுக்காக எங்கள் மறவர்கள் தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ தான் தேகங்கள் அணைந்துவிட்டன. தீ அப்படியே செந்தீயைத் தீண்டாதே தள்ளிநில் இந்தியே என பதிவிட்டுள்ளார்.