கள்ளக்குறிச்சி விவகாரம் .. தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்

DMK Anbil Mahesh Poyyamozhi
By Irumporai Jul 18, 2022 05:36 AM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

கள்ளக்குறிச்சி சென்ற அமைச்சர்

இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்ட நிலையில், பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தின் போது, கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 55 போலீசார் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி விவகாரம் .. தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் | Do Not Politic Kallakurichi Issue Anbil Mahesh

அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் வஜ்ரா வாகனங்களுடன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வன்முறை சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை 

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், யார் மீது தவறு இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.

கள்ளக்குறிச்சி விவகாரம் .. தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் | Do Not Politic Kallakurichi Issue Anbil Mahesh

பெற்றோர் உணர்வை புரிந்து கொண்டு தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும். வன்முறை நடந்த பள்ளியை மீண்டும் சீரமைக்க குறைந்தது 2 மாதங்கள் ஆகும் .

என்பதால் அங்கு படித்து வரும் மாணவர்களின் எதிர்காலத்தின் நலன் கருதி அவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்கள். என்றும் வழக்கம் போல் தனியார் பள்ளிகள் இயங்கும், அரசின் அனுமதியின்றி விடுமுறை அறிவிக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.