மக்களுக்காக போராடவா? விஜயலட்சுமியை எதிர்த்து போராடவா?...சீமான் கேள்வி
நடிகை விஜயலக்ஷ்மி குறித்து கேள்வி எழுப்பபட்ட போது, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், கேள்வியை கேட்கலாம் கேவலங்களை கேட்கக்கூடாது என பதிலளித்துள்ளார்.
விஜயலக்ஷ்மி புகார் - சீமான் விளக்கம்
செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகை விஜயலக்ஷ்மியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, இது தேவையற்ற கேள்வி என கூறிய சீமான், இதே மாதிரியான குற்றசாட்டு பல பேர் மீதுள்ளது என சுட்டிக்காட்டி, தேவையில்லாத விஷயத்தை ஏன் பேச வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடிகை விஜயலக்ஷ்மி திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் தனது வாக்குமூலத்தை அளித்தார். இந்நிலையில், விரைவில் சீமான் கைது செய்யப்படுவார் என பரவலாக கூறப்பட்டு வருகின்றது.
கடுப்பான சீமான்
விஜயலக்ஷ்மி அளித்த புகார் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்படும் அது குறித்து தொடர் செய்திகள் வெளியாகும் நிலையில், நாம் தமிழர் சீமான் இதன் காரணமாக சற்று கோபமடைந்து வருகின்றார். அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மீண்டும் நடிகை விஜயலக்ஷ்மி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால சற்று நிதானமிழந்த சீமான், பத்திரிகையாளர்களை கேள்வியை கேட்கவேண்டும், கேவலங்களை கேட்கக்கூடாது என கூறி, நான் தற்போது மக்களுக்காக போராடவா? அல்லது விஜயலட்சுமியை எதிர்த்து போராடவா? என வினவியிருக்கிறார்.