முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக

Vijay DMK Supreme Court of India Karur
By Karthikraja Jul 07, 2026 10:03 AM GMT
Report

முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை விதிக்குமாறு தொடரப்பட்ட வழக்கை திமுக திரும்ப பெற்றது.

கரூர் செல்லும் முதல்வர் விஜய்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக | Dmk Withdraw Petition Against Vijay Karur Visit

இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விஜய் முதல்வராவதற்கு முன்னர் டெல்லி சென்று வழக்கு விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வந்தார்.

இந்நிலையில் வரும் ஜூலை 10 ஆம் திகதி முதல்வர் விஜய், கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். 

முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக | Dmk Withdraw Petition Against Vijay Karur Visit

இதனிடையே, "கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கிறது. அதை முடிக்காமல் விட மாட்டோம். எங்கள் தலைவர் மீது கை வைத்தீர்களே, மக்களை கொன்று குவித்தீர்களே அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையானது. 

கோமாவில் இருந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய முதல்வர் விஜய் - கண்கலங்கிய அமைச்சர் ஆனந்த்

கோமாவில் இருந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய முதல்வர் விஜய் - கண்கலங்கிய அமைச்சர் ஆனந்த்

வழக்கை திரும்ப பெற்ற திமுக

இதனையடுத்து, முதல்வர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்பதால் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும், கரூர் விவகாரம் குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக | Dmk Withdraw Petition Against Vijay Karur Visit

இன்று இந்த வழக்கு நீதிபதி, "இந்த மனு நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், முதலமைச்சர் விஜயை குற்றம்சாட்டப்பட்ட நபர் என திமுக வழக்கறிஞர் கூறியதற்கு, முந்தைய அரசில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்படவில்லை, எப்படி முதல்வரை குற்றம்சாட்டப்பட்ட நபர் என குறிப்பிடுகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், முதல்வரின் பயணத்தை நீதிமன்றம் எவ்வாறு முறைப்படுத்த முடியும்? நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திப்பது எவ்வாறு சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமையும்? உங்களுடைய சண்டைகளை வெளியே வைத்துக் கொள்ளுங்கள்; உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றாதீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வழக்கு நிலுவையில் இருக்கும்போது அந்த வழக்கு தொடர்பாக சில கருத்துகளை அமைச்சர்களோ, முதலமைச்சரோ தெரிவித்தால் அதற்கு அவமதிப்பு வழக்குதானே தொடர முடியும்? என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கரூர் வழக்கை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவிடம் இது குறித்து புகார் அளிக்க உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியதை திமுக மனுவை திரும்பப் பெற்றது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.