திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் : காரணம் என்ன?

DMK
By Irumporai Oct 21, 2022 03:23 AM GMT
Report

திமுக செய்தி தொடர்பாளர் கே எஸ் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளதால் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தேர்தல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்ததே

திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் : காரணம் என்ன? | Dmk Spokesman Ks Radhakrishnan Suspend

இன்னும் ஒரு சில நாட்களில் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ள நிலையில் அவருக்கு சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உட்பட பல தலைவர்களும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கார்கே குறித்து சர்ச்சை

இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான கார்கே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார் .

அவரது சமூக வலைதள பதிவில் செய்யப்பட்டிருந்த விமர்சனம் திமுக தொண்டர்கள் மற்றும் திமுக தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.