முதலமைச்சர் விஜய்க்கு எதிரான திமுக மனு: இன்று விசாரணை
Vijay
Aadhav Arjuna
By Fathima
கரூர் சம்பவம் தொடர்பில் விசாரணையை பாதிக்கும் வகையிலான கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்ககூடாது என உத்தரவிடக்கோரி திமுக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு திமுக வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
மேலும், கரூர் சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வரும் வேளையில் தமிழக அமைச்சர்களாக உள்ள சில குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளை வளைக்க தீவிர முயற்சி மே்றகொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக வருகிற 10ம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்லவுள்ள நிலையில் வழக்கு விசாரணையை பாதிக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று குறித்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.