இலங்கை மக்களுக்கு உதவ திமுக எம்பிக்கள் ஒரு மாத ஊதியம்

DMK
By Irumporai May 05, 2022 06:51 AM GMT
Report

 இலங்கை மக்களுக்கு உதவ திமுக எம்பிக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றனர்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாகப் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பெரும் அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, பஸ் கட்டணம், கோதுமை மாவு, உணவு வகைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பொருள்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்து உள்ளன. இந்த பொருள்களின் விலை உயர்வால் மக்கள் இலங்கையின் பல பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று பல பகுதிகளில் போராட்டம் தீவிரம் அடைந்தது. கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் மக்கள் பிரதான சாலையில் இறங்கிக் கோஷமிட்டு டயர்களை கொளுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது.  

இந்த நிலையில் இலங்கையில் தற்போது தவித்து வரும் பொதுமக்களுக்கு தமிழக அரசு நிதி உதவிகளை அளித்துள்ள நிலையில் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ திமுக எம்.பி.க்கள் நிதியுதவி அளிக்க உள்ளனர்.

அதாவது திமுக எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை அளித்துள்ளனர் எனபது குறிப்பிடதக்கது.