உலக பட்டினி குறியீடு பட்டியலை ஏற்க மறுத்த ஸ்மிருதி இரானி - திமுக எம்.பி கனிமொழி விமர்சனம்!
உலக பட்டினி குறியீடு பட்டியலை ஏற்க மறுத்த அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது திமுக எம்.பி. கனிமொழி விமர்சனங்களை வைத்துள்ளார்.
அமைச்சர் ஸ்மிருதி இரானி
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற தொழில் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் "இந்தியாவின் உண்மையான நிலவரத்தை அறியாமல் உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், 140 கோடி மக்களில் வெறும் 3 ஆயிரம் பேரிடம் இருந்து மட்டும் கருத்து கேட்டு வெளியிடப்பட்ட பட்டியல் மூலம் எப்படி உண்மையான நிலவரத்தை நம்மால் அறிய முடியும்" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கனிமொழி எம்.பி விமர்சனம்
இந்நிலையில் ஸ்மிருதி இரானியின் கருத்தை விமர்சித்து திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "உலக பட்டினி குறியீடு பட்டியல் தயார் செய்யப்பட்ட முறையை அறிந்து கொள்ளாமல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதை விமர்சித்து பேசியிருப்பது வேதனையளிக்கிறது.
It is painful to see the Minister of Women and Child Development mocking the Global Hunger Index without understanding its implications. This raises serious questions about the competency of the BJP government in addressing malnutrition, inadequate food distribution, and child… pic.twitter.com/raFk06jpRD
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 21, 2023
ஊட்டச்சத்து குறைபாடு, உணவு தட்டுப்பாடு, குழந்தைகள் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மத்திய பாஜக அரசின் தகுதி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்த பேச்சு மூலம் தெரியவந்திருப்பதாக" கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.