சட்டம் போட்டு ஊழல் செய்வது எப்படி? உலகத்துக்கே காட்டிய மோடி - கனிமொழி தாக்கு!
மக்களவை தேர்தலில் பாஜக நோட்டாவுக்கு கீழேதான் இருக்கும் என்று திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கனிமொழி
தென்சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி திருவான்மியூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் "பாஜகவில் வேட்பாளர்கள் இல்லாததால் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வேட்பாளராக நிற்கிறார். சட்டம் போட்டு ஊழல் செய்வது எப்படி என பிரதமர் மோடி உலகத்துக்கே காட்டிய ஊழல்தான் தேர்தல் பத்திரம்.
திடீர் அக்கறை
திடீரென பிரதமருக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை வந்துள்ளது. இந்தியாவே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தான் பின்பற்றி வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுக்கின்றன.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை ரூ.500 குறைக்கப்படும். பெட்ரோல் விலை குறைக்கப்படும். மக்களவை தேர்தலில் இரண்டாவது இடத்தில் அதிமுக தான் வரும். பாஜக நோட்டாவுக்கு கீழேதான் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.