மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும்: எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுகவை சேர்ந்த125 சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ளும் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பேரவையில் சிறப்பாக செயல்படுவதற்கு உறுப்பினர்கள் துறை வாரியாகவும், தொகுதி வாரியாகவும் தரவுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.