காவிரி நீர் விவகாரம்: தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்

M K Stalin Tamil nadu C Joseph Vijay
By Vinoja Aug 01, 2026 07:59 AM GMT
Report

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்துக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, தமிழக முதல்வர் ஆகஸ்ட் 3-ம் தேதி பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தப் பயணத்தை தவிர்க்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

காவிரி நீர் விவகாரம்: தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின் | Dmk Leader Scathing Criticism On Cm Vijay

இந்நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழக முதல்வர் தனது கர்நாடகப் பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தொலைபேசி மூலம் கேட்டுக்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் வருகையின்போது கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், சூழல் சரியாக இல்லாத நிலையில் வேறு ஒரு நாளில் சந்திப்பது சிறந்தது என்றும் அவர் கூறினார்.

காவிரி நீர் விவகாரம்: தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின் | Dmk Leader Scathing Criticism On Cm Vijay

ஸ்டாலின் அறிக்கை

இதற்கிடையே, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வரின் முடிவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரங்களில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் பயன் இல்லை என்றும், சட்டரீதியான நடவடிக்கைகளே தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் எச்சரிக்கைகளை மீறி கர்நாடகா செல்ல முயன்றதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், கர்நாடக அரசு தற்போது சந்திப்பை தவிர்க்கும் நிலைக்கு வந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து மாநிலத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதல்வர் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவாரா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.