திமுக மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது - ஜி.கே.வாசன்

Tamil nadu Erode
By Thahir Jan 23, 2023 06:12 AM GMT
Report

திமுக மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் பேட்டி  

புதுக்கோட்டை செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, கடந்த பல மாதங்களாக திமுக ஆட்சி, மக்களின் மீது பல சுமைகளை ஏற்றி இருக்கிறார்கள். அதற்கு தொலைக்காட்சியும், பத்திரிகையுமே சாட்சி.

DMK has lost people

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற அவநம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. இடைத்தேர்தலை பொறுத்தவரையில் திமுக மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது.

பெரிய கட்சி என்பதால், அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும். எனவே, இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் வெற்றிபெறுவதற்கான வியூகத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இந்த வியூகம் வெற்றி வியூகமாக அமையும். இன்றைய அரசியல் சூழல், தமிழ் மாநில காங்கிரசின் எதிர்கால வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என அவர் கூறினார்.