திமுகவில் 40 வருசமா ஒரே ஆள் தான்...திருமாவளவன் பரபரப்பு பேச்சு
திமுக அதிமுக போன்ற கட்சிகளில் 30, 40 வருடங்களுக்கு ஒரே மாவட்ட செயலாளர்கள் தான் இருப்பார்கள் என்றும் ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அப்படியில்லை என விசிக'வின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருமா கருத்து
செங்கல்பட்டு மாவட்டத்தின் மாமல்லபுரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் மறைந்த அக்கட்சியின் மூத்த பெண் நிர்வாகியின் படத்திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தொண்டர்களிடம் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக - அதிமுக போன்ற கட்சிகளில் தொடர்ந்து 30, 40 வருடங்களுக்கு ஒருவரே மாவட்ட செயலாளராக தொடுவர் என்றும் அவர்கள் தங்களது கட்சி நிர்வாகத்தை ஏற்று கொண்டு நடப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மட்டும் தான் மாவட்டச் செயலாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசல்
அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற்றது. இதில் பதவி கிடைக்காத பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படையாக தெரிவித்தனர்.அதில் குறிப்பிடும் படி, கள்ளக்குறிச்சியில் தனக்கு பதவி வழங்கப்படாததன் காரணமாக பெண் விசிக நிர்வாகி ஒருவர் கட்சி மேடை ஒன்றிலேயே கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தது பரவலானது.
அதன் அடிப்படையில் தான் திருமாவளவன் இந்த கருத்தை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் தெரிவித்திருப்பார் என கருதப்படுகிறது. மொத்தமுள்ள 38 மாவட்டங்களுக்கு விசிக'வில் நியமனத்திற்கு மொத்தமாக நல்லாயிரத்திற்கும் மேலான விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.