அக்.9-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு
வருகிற அக்டோபர் 9-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் கூடும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
துரைமுருகன் அறிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் 15வது பொதுத்தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 9-10-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லுாரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
"தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது"
— DMK (@arivalayam) September 28, 2022
- கழக பொதுச்செயலாளர் திரு @katpadidmk அவர்கள் அறிவிப்பு.#DMK pic.twitter.com/otkQ8Lktce