ஓபிஎஸ் மகன் கார் மீது திமுகவினர் கல்வீசித் தாக்குதல்
attack
dmk
panneerselvam
Raveendranath Kumar
By Jon
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பியுமானவர் ரவீந்திரநாத்குமார். இவரது காரை போடிநாயக்கனூரில் 20க்கும் மேற்பட்ட திமுகவினர் தாக்கி அடித்து உடைத்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுகவில் இருந்து அமமுக சென்று அங்கிருந்து திமுக சென்ற தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.
இதனால் இருவருக்குள்ளும் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் போடிநாயக்கனூரி ரவீர்ந்திரநாத்குமாரின் கார் உடைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துணைமுதல்வரின் மகன் கார் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் 20 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil
அதிகரிக்கும் பலி - நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் - நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம் IBC Tamil