அந்த கட்சியுடன் தான் கூட்டணி..!!போட்டுடைத்த பிரேமலதா விஜயகாந்த்..!!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் துவங்கி பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில், பிரேமலதாவும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கூட்டணி விவகாரம்
அதிமுக பாஜக கூட்டணி முறிவடைந்ததை அடுத்து தமிழகத்தில் மூன்று கூட்டணிகள் அமைய போகின்றது என்பது கிட்டத்தட்ட முடிவான ஒன்றே. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி ஒன்று அமைய வாய்ப்புள்ளது.
இதில் எந்த கட்சிகள் இக்கூட்டணிக்கு செல்லும் என்ற பேச்சுக்கள் தற்போதிலிருந்தே விவாதிக்கப்பட்டு வருகின்றது. திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தாங்கள் திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி எவ்வாறு அமையும் என்பதில் சந்தேகம் நீடித்து வருகிறது.
பிரேமலதா பேட்டி
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி குறித்து கட்சி நிலைபாட்டை தெரிவித்துள்ளார். தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த வேலைகளையும் தேமுதிக தொடங்கவில்லை என கூறி, தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் காலம் அவகாசம் இருப்பதால் அது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.
ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி வைக்கும் என உறுதிபட அவர் தெரிவித்தார். அதிமுக பாஜக கூட்டணி முறிவு தொடர்பான கேள்வி கேட்கப்பட்ட போது, அதிமுக -பாஜக கூட்டணி பிளவு என்பது அவர்கள் முடிவு தான் என கூறி, அதில் தேமுதிக கருத்து சொல்ல முடியாது என்றார்.