தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது..!
தீபாவளி படிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி தொடங்கியது.
ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
ரயில்களை கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும். இதையடுத்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் ரயில்வே கவுண்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9 ஆம் தேதியும், 13 ஆம் தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10 ஆம் தேதியும், ரயிலில் பயணம் செய்யலாம்.
14 ஆம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்யலாம்.
இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமை முதலே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.