‘’கொரோனா தடுப்பூசி - 2 டோஸ் போட்டால் மதுவில் 10% தள்ளுபடி ‘’ - எங்கு தெரியுமா ?
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் போதிலும் கூட, 3-வது அலையை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதில் சுகாதாரத்துறை உறுதியாக உள்ளது. மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்த வைப்பதற்காக, மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளையும், கட்டுப்பாடுகளையும் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டால் மட்டுமே மது வழங்கப்படும் என்ற அதிரடி உத்தரவை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கந்த்வா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, தடுப்பூசி 2 டோஸ்களை செலுத்திக் கொண்டவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி விலையில் மது பானங்கள் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் கந்த்வா மாவட்ட நகரில் உள்ள மூன்று மதுபானக் கடைகளில் தடுப்பூசியின் முழு அளவை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காண்பித்து 10 சதவீத தள்ளுபடி விலையில் மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கிக் கொள்ளலாம் என கலால் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த தள்ளுபடி அறிவிப்பு மதுபிரியர்களிடையே வரவேற்பை பெற்றாலும் , மது பழக்கத்தை அரசு ஊக்குவிப்பதாக சிலர் விமர்சித்து வருகின்றனர்.