பார்வை மாற்றுத்திறனாளி பெண் படுகொலை - கள்ளக்காதல் ஜோடி போட்ட ஸ்கெட்ச்!

Tamil nadu Madurai Crime Death
By Jiyath Mar 16, 2024 05:36 AM GMT
Report

நகை, பணத்திற்காக பார்வை மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் கொலை 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பார்வை மாற்றுத்திறனாளியான கவிதா (50). இவரின் கணவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவர்களின் மகள் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பார்வை மாற்றுத்திறனாளி பெண் படுகொலை - கள்ளக்காதல் ஜோடி போட்ட ஸ்கெட்ச்! | Disabled Woman Killed Love Couple Arrested

இந்நிலையில் வீட்டில் அருகில் உள்ளவர்களின் உதவியோடு தனியாக வசித்து வரும் கவிதா கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணியால் பொத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

மேலும், அவரின் வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் கவிதாவின் எதிர் வீட்டில் வசித்து வந்த சிவானந்தம் (24) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

கலை நிகழ்ச்சிக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - திருப்பூரில் 7 பேர் கைது!

கலை நிகழ்ச்சிக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - திருப்பூரில் 7 பேர் கைது!

இருவர் கைது 

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், "கவிதாவின் வீட்டின் அருகே வசித்து வரும் கலையரசி (30) என்ற திருமணமான பெண்ணுடன், சிவானந்தத்திற்கு பழக்கம் ஏற்பட்டு பல நாட்களாக உறவில் இருந்து வந்துள்ளனர்.

பார்வை மாற்றுத்திறனாளி பெண் படுகொலை - கள்ளக்காதல் ஜோடி போட்ட ஸ்கெட்ச்! | Disabled Woman Killed Love Couple Arrested

கவிதாவின் வீட்டில் அதிகளவு நகை, பணம் வைத்திருப்பதை அறிந்து கொண்ட இருவரும் அதனை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது கவிதா கூச்சலிட்டதால் வாயில் துணியை வைத்து திணித்து, ஒரு துணியால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் பீரோவிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக சிவானந்தம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கலையரசி, சிவானந்தம் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.