நடிகை பாவனாவுடன் தகாத உறவில் இருந்தேன் - பிரபல இயக்குநர் பரபரப்பு பேச்சு..!

Bhavana Tamil Cinema Mysskin
By Thahir Jun 23, 2023 09:34 AM GMT
Report

நடிகை பாவனாவுடன் தான் ரகசிய உறவில் இருந்ததாக பிரபல இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

பாவனா பாலியல் பலாத்காரம் 

சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. அதை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் தீபாவளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகை பாவனாவுடன் தகாத உறவில் இருந்தேன் - பிரபல இயக்குநர் பரபரப்பு பேச்சு..! | Director Was In Relationship With Actress Bhavana

இதை தொடர்ந்து மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருந்தார். இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி ஷுட்டிங் முடித்து விட்டு திரும்பும் போது திடீரென காரில் கடத்தப்பட்டு முகம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

பாலியல் பலாத்கார சம்பவத்தின் பின்னணியில் நடிகர் திலீப் இருப்பதாக பாவனா கூறிய நிலையில் போலீசார் திலீப்பை தீவிரமாக விசாரித்தனர்.

இதனால் நடிகை பாவனா சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தகாத உறவில் இருந்த இயக்குநர் 

இயக்குநர் மிஷ்கின் கல்லுாரி விழா ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது அவர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நடிகை பாவனாவுடன் தகாத உறவில் இருந்தேன் - பிரபல இயக்குநர் பரபரப்பு பேச்சு..! | Director Was In Relationship With Actress Bhavana

அப்போது மாணவர் ஒருவர் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் நீங்கள் என்ன சந்தோஷம் அடைந்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

நான் பாவனா உடன் இருந்த அந்தரங்க உறவு தான் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது என கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சுக்கு அப்போதே ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.