நிலநடுக்கத்தில் சிக்கிய இயக்குநர் ராஜமெளலி - மகன் பகிர்ந்த பதற வைக்கும் புகைப்படம்!

S. S. Rajamouli Earthquake
By Swetha Mar 21, 2024 07:52 AM GMT
Report

இயக்குநர் ராஜமெளலி ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கியதாக வெளியான புகைப்படம் வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

நிலநடுக்கம்

இயக்குநர் ராஜமெளலி தனது மகன் கார்த்திகேயாவுடன் ஜப்பானில் உள்ளார். அங்கு திடீரென இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அப்பவும், மகனும் 28-வது மாடியில் செய்வதறியாமல் தினறி நின்றதாக அவரது மகன் கார்த்திகேயா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நிலநடுக்கத்தில் சிக்கிய இயக்குநர் ராஜமெளலி - மகன் பகிர்ந்த பதற வைக்கும் புகைப்படம்! | Director Rajamouli In Japan Earthquake

இது குறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், ‘ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28வது மாடியில் இருந்ததால், தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. இது நிலநடுக்கம் என்பதை உணர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. நாங்கள் அனைவரும் பயத்தில் இருந்தோம். ஆனால், சுற்றியிருந்த ஜப்பானியர்கள் எல்லாம் மழை பெய்ய ஆரம்பித்தது போல் அசையவில்லை’ இவ்வாறு குறிப்பிட்ட அவர் தனது ஸ்மார்ட் வாட்சில் வந்த நிலநடுக்க எச்சரிக்கை குறுஞ்செய்தியையும் படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

நிலநடுக்கத்தில் சிக்கிய இயக்குநர் ராஜமெளலி - மகன் பகிர்ந்த பதற வைக்கும் புகைப்படம்! | Director Rajamouli In Japan Earthquake

கடந்த வாரம் ஜப்பானில் ரிக்டர் அளவுகோலில் 6 எனப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

நரகமாகும் தண்ணீர் பஞ்சம்; பெங்களூரை தொடர்ந்து, மேலும் 5 நகரங்கள்! சென்னையின் நிலை என்ன?

நரகமாகும் தண்ணீர் பஞ்சம்; பெங்களூரை தொடர்ந்து, மேலும் 5 நகரங்கள்! சென்னையின் நிலை என்ன?

இயக்குநர் ராஜமெளலி

‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கான ஸ்பெஷல் ஸ்கிரீனிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதனால் ராஜமெளலி தனது டீமுடன் தற்போது ஜப்பானில் உள்ளார். அந்த விழாவில் கலந்துகொண்ட அவர் அடுத்து மகேஷ் பாபுவுடன் புதிய படம் ஒன்றில் இணைய இருப்பதாக கூறியுள்ளார்.

நிலநடுக்கத்தில் சிக்கிய இயக்குநர் ராஜமெளலி - மகன் பகிர்ந்த பதற வைக்கும் புகைப்படம்! | Director Rajamouli In Japan Earthquake

இதுகுறித்து பேசியபோது, “நான் என்னுடைய அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கி விட்டேன். திரைக்கதை பணி முடிந்தது. நடிகர்கள் குறித்து இன்னும் உறுதியாகவில்லை. மகேஷ்பாபு மட்டும் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்” என தெரிவித்தார்.