போன் கூட பண்ண மாட்டாங்க..வருஷத்தில் ஒரு முறைதான் பேசுவேன் - மனம் திறந்த மிஸ்கின்!
மிஸ்கின் பிரபல இணையத்திற்கு வீடியோ பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், தனது மனைவி மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
மிஸ்கின்
அதில், என்னுடைய வாழ்க்கையை அறிந்து கொள்வது மற்றவர்களுக்கு ஆர்வத்தை தருமா எனத் தெரியவில்லை.
என் மனைவியைப் பார்த்தேன், காதல் வயப்பட்டேன், கல்யாணம் பண்ணோம், கொஞ்ச நாள்ல பிரிஞ்சிட்டோம். அவங்க ரொம்ப நல்லவங்க. ரொம்ப அன்பானவங்க.
அப்படியே போயிடுச்சு
என்னுடைய மகளை, இன்னும் பத்திரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். நானும் ஒரு கணவராக என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கொண்டிருக்கிறேன். சேரவில்லை, அவ்வளவு தான். சேராததற்கு எந்த காரணமும் இல்லை.
சினிமாவிற்கு வந்துட்டேன், அப்படியே போயிடுச்சு. அவங்க மேல எந்த தப்பும் இல்லை. என் மேல தான் எல்லா தப்பும். நான் பிரிஞ்சிட்டேன். இன்னும் அன்போடு என் மகளை பார்த்துக்கிறாங்க.
பைபிள் மாதிரி
என்னையும் அன்போடு தான் நேசிச்சுட்டு இருக்காங்க. நானும் சினிமாவில் இப்படியே உருண்டோடி வந்துட்டேன். சினிமாவில் எனக்கு அவர் கொடுத்த சுதந்திரம், வேறு யாரும் அந்த சுதந்திரத்தை தரவில்லை.
போன் கூட பண்ண மாட்டாங்க. ஒரு ஆண்டுக்கு ஒரு முறை தான் என்னிடம் பேசுவாங்க. அதுவும் மகள் தொடர்பானதாக இருக்கும். ரொம்ப தயங்கி தயங்கி தான் என்னிடம் பேசுவாங்க.
அப்படி தான் அந்த தாய் வாழ்கிறார். ஒரு பைபிள் மாதிரி தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமானால், நான் எமோஷன் ஆகிவிடுவேன்.
வாழ்க்கையில் நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு பெண்ணை பார்ப்பேனா எனத் தெரியவில்லை, என மிஸ்கின் பேசியுள்ளார்.
பிரபல நடிகையை டேட்டிங் செல்ல வற்புறுத்திய மகள்! அந்த 46வயது நடிகை யார்?